தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தமிழ் தெலுங்கு தாண்டி ஹிந்தியில் தற்பொழுது நடித்து வருகிறார். தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
கத்தி ,தங்க மகன், அஞ்சான் , நீ தானே என் பொன் வசந்தம் ,நான் ஈ போன்றவை இவர் நடிப்பில் வெளியான சில படங்கள். பாலிவுட்டில் அக்ஷய்குமார் ,ரன்பீர் கபூர் எனத்தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் அமர்க்கவுசிக் இயக்கி வரும் படத்தின் மூலமாக அறிமுகமாக உள்ளாராம் சமந்தா. இந்த படத்தின் கதாநாயகன் ஆயுஷ்மான் குரானா. இந்த படத்தில் நடிகை சமந்தா இளவரசியாகவும் ,பேயாகவும் என் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
முதல் முறையாக சமந்தா பேய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.