Connect with us

உறவினர்கள் எதிர்ப்பையும் மீறி புஷ்பா படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டது இதனால் தான்.. நடிகை சமந்தா பளீச்..

CINEMA

உறவினர்கள் எதிர்ப்பையும் மீறி புஷ்பா படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டது இதனால் தான்.. நடிகை சமந்தா பளீச்..

 

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வரும் இவர் தெலுங்கு நடிகர் நாகசைய்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நான்கு ஆண்டுகளில் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.

   

இவர்களின் விவாகரத்து ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தனது விவாகரத்தை தொடர்ந்து சினிமாவில் படு கவர்ச்சியாக நடிக்க தொடங்கிவிட்டார் சமந்தா. அதிலும் புஷ்பா படத்தில் ஐட்டம் சாங் ஒன்றிற்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். அந்த படம் வெற்றி பெற்றதற்கு அப்பாடலும் மிகப்பெரிய காரணம் .

இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக நடிகர் சமந்தா டான்ஸ் ஆடி இருந்தார். இந்த பாடலின் நடனத்தை பார்ப்பதற்கே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் படையெடுத்தனர். மேலும் சமந்தாவுக்கு இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதற்கு ஐந்து கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “புஷ்பா படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்த போது நான் விவாகரத்து முடிவில் இருந்தேன். அப்போது என் தோழிகள் குடும்பத்தினர் நீ விவாகரத்து முடிவை அறிவிக்கப் போகிற நேரத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டாம் என்று கூறினார்கள்.

ஆனால் அதையெல்லாம் நான் கண்டுகொள்ளாமல் இந்த பாடலில் நடனம் ஆடினேன். இது எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகவே அமைந்தது அந்த வாய்ப்பை நிராகரிக்க என்னிடம் காரணமே இல்லை நான் ஏன் மறைக்க வேண்டும்? நான் எந்த தவறும் செய்யவில்லை திருமண வாழ்க்கையில் நான் 100% உண்மையாக இருந்தேன். ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை” என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். தற்போது நடிகை சமந்தா சிட்டாடெல் என்கின்ற வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top