மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) 2% உயர்த்தப்பட்டு, 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜனவரி 2026 முதல் முன் தேதியிட்டு அமலுக்கு வருவதால், ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏப்ரல் மாத ஊதியப் பணிகள் ஏற்கனவே முடிவடைந்திருக்கலாம் என்பதால், இந்த கூடுதல் பலன்கள் மே மாதச் சம்பளத்தில் பிரதிபலிக்க அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் அடிப்படை ஊதியம் 50,000 ரூபாய் உள்ளவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வரை சம்பளம் உயரும்.
மே மாத தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மூன்று முக்கியச் செய்திகள் காத்திருக்கின்றன: முதலாவதாக 2% அகவிலைப்படி உயர்வு, இரண்டாவதாக அதன் மூலம் கிடைக்கும் நிரந்தரச் சம்பள உயர்வு, மூன்றாவதாக ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை (DA Arrears) மொத்தமாக வழங்கப்பட உள்ளது. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றத்தால் சுமார் 1.18 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பயனடையும்.
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…