இந்தியன் 3, ராம் சரணை வைத்து Game Changer ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் ஷங்கர். இதில் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். கேம் சேஞ்சர் படத்தை சுமார் 450 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தில்ராஜு தயாரித்துள்ளார். படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல் காட்சிகளுக்கு மட்டும் படமாக 90 கோடி செலவழித்துள்ளனர்.
இந்த படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ராம் நந்தன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராம்சரண் தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு மாவட்ட ஆட்சியராக வருகிறார். நேர்மையாக இருக்கும் இவர் அதிரடி ஆக்சன் களை மேற்கொள்ளும் நிலையில் இதில் அமைச்சராக நடித்துள்ள SJ சூர்யாவுக்கு இது பிடிக்கவில்லை.
இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டமும் இறுதியாக ராம் நந்தன் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் ட்விஸ்ட். இந்நிலையில் படத்தில் நடித்த நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் ராம்சரண் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
நடிகர் ராம்சரண் 65 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். மற்ற படங்களுக்கு 100 கோடி வேலை சம்பளம் வாங்கும் ராம்சரண் இந்த படத்துக்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டாராம். இயக்குனர் சங்கர் மற்ற படங்களுக்கு 50 கோடி வரை வாங்கும் நிலையில் கேம் சேஞ்சர் படத்துக்காக 35 கோடி தான் வாங்கியுள்ளாராம். நடிகை கியாரா அத்வானி இந்த படத்துக்காக 7 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…