ரஷ்யாவில் 50 பேர் பயணம் செய்த An-24 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. திடீரென கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்து மாயமான நிலையில் விமானத்தின் பாகங்கள் விழுந்து நொறுங்கி கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சைபீரியாவை சேர்ந்த அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் விமானத்தை தேடும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
சீனாவின் எல்லையை ஒட்டிய ரஷ்யாவின் அமுர் பிராந்தியத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து விமான விபத்து நிகழ்ந்து கொண்டிருப்பது பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
