தமிழகத்தில் RTE சட்டத்தின் கீழ் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயிலும் மாணவர்களின் விவரங்களை வழங்குவதற்கான காலகெடுவை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முழு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டுமென அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிதாக எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவரங்கள் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தற்போது RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
