பிஎம் கிஷான் திட்டத்தின் 21-வது தவணைத் தொகையை நவ.19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 20 ஆம் தவணைத் தொகையானது ஆகஸ்ட் 2-ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. அடுத்த தவணைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. KYC பிரச்னையால் 20 ஆவது தவணையை பெறாதவர்களுக்கு இந்த முறை ரூ.4,000 மொத்தமாக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
