Categories: LIFESTYLE

ரூ.20-க்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலை மிஞ்சும் தரமான உணவு… கோவையின் பசி தீர்க்கும் சாந்தி கேண்டீன் பின்னனி

விற்கும் விலைவாசியில் ஒரு காலத்தில் 2 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த இட்லியின் விலை சாதாரணமான ஹோட்டல்களில் கூட இன்று ரூ.10-க்கு விற்கப்படுகிறது.  தோசையின் விலை 50-ஐ தொட்டு விட்டது. சாதாரணமான ஹோட்டல்களில் இந்த விலைப்பட்டியல் என்றால் சற்று ஹைகிளாஸ் ஹோட்டல்களில் மிடில் கிளாஸ் மக்கள் உள்ளே கூட நுழைய முடியாது.

ஆனால் கோவையில் ரூ.20-க்கு தரமான உணவினை வயிராற வழங்கி கோவை மக்களுக்கு பசி ஆற்றும் தாயாகத் திகழ்கிறது சாந்தி கேண்டீன். இந்த ஹோட்டலின் பின்னணி என்ன எப்படி சாத்தியம் என்று பார்ப்போமா?

தினமும் 3000 நபர்களுக்கு மேல் தரமான சாப்பாடு வழங்கும் சாந்தி கேண்டீனை நிறுவியவர் சுப்பிரமணியம் என்பவர்தான். கோவை சாந்தி கியர்ஸ் அதிபர் என்றால் அனைவருக்கும் தெரியும். அவரது மனைவியின் பெயர் தான் சாந்தி. தனது மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீஸஸ் என்ற பெயரில் இதனை அவர் நடத்தி வருகிறார்.

#image_title

தமிழகத்தில் தரமான உணவுகளை இவர்கள் அளவிற்கு எந்த ஒரு உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ரூ.20-க்கு முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் நூறு ரூபாயைத் தாண்டாது. இதனால், இந்த பகுதியில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிது. அங்கு குடியிருப்பவர்கள் அந்த வீடுகளில் சமையல் செய்வதும் கிடையாது.

ஒரே குடும்பத்தில் 4 சூப்பர் ஸ்டார்.. 5000 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு.. இந்தியாவில் பணக்கார சினிமா குடும்பம் பற்றி தெரியுமா..?

ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கென தனி உணவு விடுதியுள்ளது. அங்கு அவர்களுக்கு இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

தனது சேவை உணவோடு நின்று விடக் கூடாது என்பதற்காக கல்வி, எரிபொருள், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று பல சேவைகளை செய்து வருகிறார்கள். இந்த வளாகத்திலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 % கட்டணம் குறைவு.

#image_title

இந்த அனைத்துப் புகழுக்கும் காரணம் இதன் நிறுவனர் சுப்பிரமணியம். ஆனால், வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது என்று சொல்வதைப் போல, இதுவரை தன்னை எங்கேயும் இவர் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லையாம். பெரும்பாலான ஊடகங்கள் அவரைச் சந்தித்துப் பேட்டியெடுக்க முயற்சி செய்தன. ஆனால் அவர் அந்த விளம்பரத்தை விரும்பவில்லை.

ஒரு மினி அரசாங்கமாகவே செயல்பட்டு கோவை மட்டுமல்லாது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தெய்வமாகவே விளங்குகிறார் இந்த மாமனிதர்.

John

Recent Posts

“எனக்கு பொறக்க போறது இந்த குழந்தை தான்”… பார்ட்டி வைச்சு வீடியோ வெளியிட்ட ‘குக் வித் கோமாளி’ இர்பான்…  ஷாக்கில் ரசிகர்கள்…

விஜய் டிவியில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக…

6 mins ago

MGR க்கும் அவர் அண்ணனுக்கும் ஏற்பட்ட புகைச்சல்… தன் பேச்சால் ஒன்று சேர்த்த NSK- இதனாலதான் அவர் கலைவாணர்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல்…

21 mins ago

சேலையில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.. லேட்டஸ்ட் புகைப்படம்..!

'புஷ்பா புருஷன்' என்கின்ற டயலாக் மூலமாக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு ஒரு…

31 mins ago

முதல் சந்திப்பில் கண்டுகொள்ளாத சரோஜாதேவி… ஆனாலும் பெருந் தன்மையாக நடந்த MGR – மெய்சிலிர்த்துப் போன கன்னடத்துப் பைங்கிளி!

தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள்…

36 mins ago

இளையராஜாவின் ட்யூனைக் கேட்டு பின் வாங்கிய கவிஞர்கள்… அட இந்த பாட்டுக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா?

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்…

50 mins ago

மீண்டும் முன்னாள் காதலன் ராபர்ட்டுடன் இணையும் வனிதா விஜயகுமார்.. ஓ இதுக்காக தானா..? வைரலாகும் போட்டோஸ்..!!

வனிதா விஜயகுமார் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் என்ட்ரி கொடுத்தார் பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு…

1 hour ago