“போனதை பத்தி யோசிக்காதீங்க”… கணவரை பிரிந்ததை உறுதிப்படுத்திய ரோஜா சீரியல் நடிகை…? அவரே வெளியிட்ட வீடியோவால் ஏற்பட்ட குழப்பம்…

By Begam on பங்குனி 4, 2024

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘ரோஜா’. இந்த சீரியல் முதலில் மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது. பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் சீரியல் நாயகி ஆக நடிகை பிரியங்கா நல்காரி நடித்தார்.

   

தனது முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் நடிகை பிரியங்கா. இவர் தனக்கு என்று தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் ஹீரோயினியாக நடித்து கலக்கினார். இதனிடையே இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்தத் தொடரில் இருந்துபாதியிலேயே விலகி விட்டார்.

   

 

தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நளதமயந்தி என்ற  சீரியலில் நடிகை பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை காதல் செய்து வந்தார். அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருந்தது. ஆனால் திருமணம் நடக்காமல் நின்றுபோனது. அந்த நேரத்தில் திடீரென மலேசியாவில் அவரது திருமணம் நடந்து முடிந்தது.

அதில் அவரது பெற்றோர் கூட கலந்து கொள்ளவில்லை. திருமணம் முடிந்து ஓராண்டு கூட முடியாத நிலையில் தற்போது அவர்கள் பரிந்து விட்டதாக செய்தி இணையத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரியங்கா நல்காரி உருக்கமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், ‘போனதை பத்தி யோசிக்காதீங்க. போனது போனது தான். அதை பற்றி நினைக்காதீங்க. அடுத்து என்னனு யோசிங்க. Present தான் முக்கியம். அதை மட்டும் என்ஜாய் பண்ணுங்க’ என அவர் கூறியுள்ளார். இதன்மூலம் அவர் தனது கணவரை பிரிந்ததை உறுதிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…