இன்றைய காலகட்டத்தில் நாம் என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும் உழைப்பிற்கான ஊதியம் சரியாக கிடைப்பதில்லை. வேலையை அதிகமாக வாங்கிக் கொண்டு நமக்கு வழங்கப்படும் சம்பளம் என்னவோ குறைவாகத்தான் உள்ளது. இருந்தாலும் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்பதற்காக அனைவரும் ஏதாவது ஒரு வேலைக்கு ஓடிக்கொண்டு தான் இருக்கின்றனர். இப்படியான நிலையில் அபுதாபியில் வேலைக்கு செல்லாமல் நிறுவனத்திடம் இருந்து ஊழியர் ஒருவர் 26 லட்சத்தை சம்பளமாக பெற்றுள்ளார்.
அதாவது அந்த நபருக்கு நிறுவனத்திடம் இருந்து முறையாக ஆபர் லெட்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போது வேலையில் சேர வேண்டும் என அந்த நிறுவனம் கூறாமல் ஊழியரை ஓராண்டாக இழுத்தடித்துள்ளது. இதனால் வேறு வேலைக்கு செல்லாமல் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இது தொடர்பாக அந்த நபர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு நீதி கிடைத்த நிலையில் 26 லட்சம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது. புத்திசாலித்தனமாக செயல்பட்ட இந்த நபரின் செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
