தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் முதல் தேர்தலைச் சந்திக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுவது போலத் தெரிந்தாலும், தற்போதைய கள நிலவரம் ஒரு புதிய போக்கை உணர்த்துகிறது.
பிரபல ஊடகமான ‘மாலைமலர்’ பல்வேறு பகுதிகளில் நடத்திய மக்கள் மனநிலை குறித்த கருத்துக்கணிப்பில் (Vox Pop), தவெக தலைவர் விஜய்க்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே குறிப்பிடத்தக்க ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, புதிய மாற்றத்தை விரும்புவோர் விஜய்யின் வருகையைத் தங்களுக்குச் சாதகமாகக் கருதுவதாகத் தெரிகிறது. அதே சமயம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும் அதன் நலத்திட்டங்களுக்கும் ஒரு தரப்பு மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால், தேர்தல் களம் பெரும்பாலும் ‘திமுக vs தவெக’ என்கிற திசையை நோக்கி நகர்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஒருபுறம் விஜய்க்கு உற்சாகத்தைத் தந்தாலும், மறுபுறம் அதிமுக போன்ற பாரம்பரியக் கட்சிகளின் வாக்கு வங்கியில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது. தவெக-வின் தனித்துப் போட்டியிடும் முடிவும், திமுகவின் வலுவான கூட்டணிக் கட்டமைப்பும் நேருக்கு நேர் மோதும் போது, அது ஒரு சுவாரஸ்யமான தேர்தல் முடிவுக்கு வழிவகுக்கும். வரும் மே மாதம் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் அடுத்த ‘ஜன நாயகன்’ யார் என்பதை அறிய ஒட்டுமொத்த மாநிலமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…