பெங்களூரு புலிகேசி நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் சோமசேகர், லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய புகாரின் அடிப்படையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 18 அன்று, தடைசெய்யப்பட்ட நேரத்தில் மற்றும் உச்ச போக்குவரத்து நெரிசல் நேரத்தில் இரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர் சையத் அஃப்ரோஸ் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 285-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இத்தகைய வழக்குகளில் நீதிமன்றமே அபராதத் தொகையைத் தீர்மானிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், காவலர் சோமசேகர் வாகனத்தை விடுவிக்க 5,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
https://twitter.com/HateDetectors/status/2081631649264181591/photo/1
இதை மறைமுகமாகத் தனது தொலைப்பேசியில் பதிவு செய்த லாரி ஓட்டுநர், பணம் செலுத்திய பின்னேயும் நீதிமன்றத்திற்குச் சென்று அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதை அறிந்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதனுடன் லஞ்சம் வாங்கும் வீடியோ ஆதாரத்தையும் அவர் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, கிழக்குப் பிரிவு போக்குவரத்து காவல் துணை ஆணையர் சாகில் பக்லா விசாரணை நடத்தி தலைமைக் காவலர் சோமசேகரைச் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…