ரூ.39,300 கோடி நிதிச் சுமை…. ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை சாத்தியமா?… நிதியமைச்சர் சொன்ன கணக்கு…. ஷாக்கான இல்லத்தரசிகள்….!

By Nanthini on ஆவணி 7, 2026

Spread the love

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகையை மாதம் ₹2,500 ஆக உயர்த்தினால், அரசுக்கு ஏற்படும் நிதிப் சுமை மிகப்பெரியது. தற்போது சுமார் 1.31 கோடிப் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் நிலையில், இவர்கள் அனைவருக்கும் மாதம் ₹2,500 வழங்க வேண்டுமெனில் மாதத்திற்கு ரூ.3,275 கோடியும், ஆண்டிற்கு ரூ.39,300 கோடியும் தேவைப்படும். ஆனால், தற்போதைய சூழலில் மாநில அரசு இத்திட்டத்திற்காக ஆண்டிற்கு ரூ.14,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனால், உயர்த்தப்பட்ட உரிமைத் தொகை பயனாளிகள் அனைவருக்கும் உடனடியாகச் சென்றடைவதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் மரியா வில்சன் தாக்கல் செய்த பட்ஜெட் உரை, மாநிலத்தின் தற்போதைய நிதி நெருக்கடியை வெளிப்படையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. முந்தைய அரசின் நிதி மேலாண்மையால் வருவாய் இழப்பும், இடைத்தரகர்களின் சுரண்டலும் அதிகரித்து, கசியும் ஓட்டைகளுடன் கூடிய கருவூலமே தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த நிதி கசிவுகளைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் குறைந்தபட்சம் ₹1,500 கோடி வரை கூடுதல் வருவாயை உருவாக்க முடிந்துள்ளதாகவும், கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் செய்யப்படும் வீண் செலவுகளைக் குறைப்பதன் மூலம் மேலும் சேமிப்பு உருவாகும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

   

மாநிலத்தின் நிதிநிலையைச் சீரமைக்கப் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்நிலை வருவாய் மேம்பாட்டுக் குழுவும், சேவைகளின் திறனை மேம்படுத்திச் செலவினங்களைச் சீரமைக்க உயர்நிலை செலவின சீர்திருத்தக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. புதிய முன்முயற்சிகள் மூலம் ரூ.15,000 கோடி கூடுதல் வருவாயை அடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதுடன், பழைய நலத்திட்டங்களை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், நிதி நிர்வாகத்தைச் சரியான நிதி ஒருங்கிணைப்புப் பாதைக்குக் கொண்டுவரக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

இந்த நிதி சார்ந்த எண்கள் மற்றும் அமைச்சரின் உரையை உற்று நோக்கும்போது, மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் திட்டம் உடனடியாகச் சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது. கூடுதல் வருவாய் ஈட்டும் முயற்சிகள் பலன் தரத் தொடங்குவதற்கும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் சீரடைவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு முழுமையாகக் கிடைக்க மேலும் இரண்டு ஆண்டுகள் வரை தாமதமாகவே வாய்ப்புள்ளது.