ரவீந்தர் மஹாலட்சுமி தம்பதியினர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். இந்த புகைப்படங்களை ‘திருச்செந்தூர் முருகன் துணை,நாம எல்லோரும் நல்லா இருப்போம் ,சந்தோசமா இருங்க ‘என்ற கேப்ஷனில் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரை பிரபல நடிகை மகாலட்சுமி லிப்ரா ப்ரொடக்ஷன் உரிமையாளரான ரவீந்தர் என்பவரும் காதலித்து செப்டம்பர் 1ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நாள் முதலே இவர்களது திருமணம் பற்றி சமூக வலைத்தளங்களில் தினமும் ஏதாவது ஒரு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி ‘அரசி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார். தொகுப்பாளினியாக தனது சினிமா பயணத்தை தொடங்கி இன்று சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவருக்கு முதல் திருமணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது . 6 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. லிப்ரா ப்ரொடக்ஷன் உரிமையாளரான ரவீந்திரனுக்கும் இது இரண்டாவது திருமணம் தான்.
தொடர்ந்து இவர்களது திருமணத்தைப் பற்றியும், ரவீந்தரின் உருவம் குறித்தும் அனைவரும் கேலி செய்த நிலையில் அதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்ளவில்லை. தற்பொழுது இருவரும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அங்கு அவர்கள் திருச்செந்தூர் முருகனிடம் இருந்து வேல் மற்றும் கொடியை வாங்கும் புகைப்படங்களையும், ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி உடன் இருக்கும் புகைப்படங்களையும் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அந்த புகைப்படத்திற்கு ‘திருச்செந்தூர் முருகன் துணை,நாம எல்லோரும் நல்லா இருப்போம் ,சந்தோசமா இருங்க ‘என கேப்ஷன் வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை…
செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ…
தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…
தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…
இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…