நடிகை ரவீனா டண்டன் 1991-ஆம் ஆண்டு சல்மான்கான் நடிப்பில் வெளியான பத்தர் கீ போல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து 1994-ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான சாது படத்தில் ரவீனா நடித்திருந்தார். அதன் பிறகு கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் நடித்திருந்தார்.

ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரவீனா கே.ஜி.எஃப் 2 வெற்றி படத்தில் இந்தியா பிரதமராக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் பரவீனா திரை துறையில் தனது அனுபவங்கள் குறித்து கூறியுள்ளார். திரை வாழ்க்கையில் முன்னணி நடிகையாக இருந்த ரவீனா முத்தக் காட்சிகள் நடிக்க கூடாது என்ற கொள்கையுடன் இருந்துள்ளார்.

ஒருமுறை படப்பிடிப்பின் போது ஒரு நடிகருடன் லேசாக உதடு ஓட்டும் காட்சியில் நடித்தது தனக்கு குமட்டலையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தியதாக பரவீனா கூறியுள்ளார். முத்தக் காட்சிகள் நடிக்காதது குறித்து கேட்டபோது அந்த நாட்களில் ஒப்பந்தம் எதுவும் இல்லை. ஆனால் அந்த காட்சிகளில் நான் நடிக்கவில்லை ஒரு முறை ஒரு நடிகருடன் சிறிய கடினமான நெருக்கமான காட்சியில் தவறுதலாக அவரது உதடுகள் என் உதடுகளை உரசியது.

அந்த காட்சி முடிந்த பிறகு நான் உடனே எனது அறைக்கு சென்றேன். எனது மனநிலை சரியில்லாமல் குமட்டல் வருவது போல இருந்தது என கூறியுள்ளார். முன்னதாக பரவீனா அளித்த மற்றொரு பேட்டியில் முத்த காட்சிகளில் நடிக்க விருப்பம் இல்லாதது போல, நீச்சல் உடைகளிலும் ரவீனா நடிக்கவில்லை. ஒன்று இரண்டு படங்களில் பலாத்கார காட்சிகளில் கூட உடைகள் கலையாமல் அப்படியே இருந்ததை ரவீனா நினைவு கூர்ந்தார்.

