Connect with us

மணிக்கு வெளில ஒரு ஆள் இருக்காங்களாம்.. விஷயம் தெரிஞ்சி வருத்தப்பட்டு நிக்சனிடம் புலம்பிய ரவீணா.. என்ன மணி இதெல்லாம்..??

CINEMA

மணிக்கு வெளில ஒரு ஆள் இருக்காங்களாம்.. விஷயம் தெரிஞ்சி வருத்தப்பட்டு நிக்சனிடம் புலம்பிய ரவீணா.. என்ன மணி இதெல்லாம்..??

 

பிக்பாஸ் 7 நிகச்சி கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாளை இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பதை அறிவிக்கவுள்ளனர். அர்ச்சனா, மாயா, விஷ்ணு, தினேஷ், மணி ஆகிய 5 பேரும் இறுதி போட்டியாளர்களாக வீட்டினுள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஏதேனும் ஒரு காதல் ஜோடி உள்ளே போட்டியாளர்களாக வருவர். அப்படி இந்த முறை வீட்டினுள் வந்தது மணி மற்றும் ரவீணா. இவர்கள் இருவரும் பிக்பாஸ் வருவதற்கு முன்பே ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றிய புகைப்படங்கள் மற்றும் ஒன்றாக நடனமாடிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இருவரும் பிக்பாஸ் வீட்டினுள் சென்றதில் இருந்து அடுத்த காதல் கதையாக இவர்களது ஆட்டம் பயங்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

#image_title

   

அதேப்போல இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத வண்ணம் உள்ளே ஒன்றாகவே சுற்றி வந்தனர். அடிக்கடி தனியே கூடி, மற்ற போட்டியாளர்களை பற்றி பேசுவர். இவர்களது நெருக்கத்தைப் பார்த்து பலரும் இவர்களை காதலர்கள் என்றே நினைத்த நிலையில், அவர்களோ நாங்கள் நல்ல நண்பர்கள் எனக் கூறி வந்தனர். போட்டியாளர்களே நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விளையாடாமல் தனித் தனியே விளையாடுங்கள் என பலமுறை கூறியும் கூட, ரவீணா மணியுடன் இணைந்து தான் இந்த விளையாட்டை விளாடி வந்தார்.

#image_title

ஒருமுறை மணி வீட்டை விட்டு வெளியேறும் தருவாயில் இருந்தப் போது ரவீணா தேம்பி தேம்பி அழுந்த சம்பவமும் பேசுப்பொருளாக மாறியது. இந்த நிலையில், போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் அதே வீட்டில் ஒன்றாக கூடி சந்தோஷமடைந்தனர். அப்போது நிக்சனிடம் தனிப்பட்ட முறையில் பேசிய ரவீணா, இத்தனை நாட்கள் ஒன்றாக இருந்த மணியை சகட்டு மேனிக்கு புறம் பேச ஆரம்பித்தார். அதாவது, தனக்கு வேறு ஒருவருடன் பேசும்போது ஏற்படும் மனக் கஷ்டங்கள் குறித்து மணியிடம் பகிர்ந்து கொள்வார். பிறகு அதே நபரிடம் ரவீணா சகஜமாக பேசி விடுவார். பல முறை மணி, ஒரு சிலரிடம் இருந்து தூரமாக இருக்கக் கூறினார். குறிப்பாக நிக்சனிடமிருந்து.

#image_title

நிக்சன் மாயா, மற்றும் பூர்ணிமா டீம் என்பதால், அவர்களுடன் நெருக்கமாவதை குறைத்துக் கொள்ளுமாறு பலமுறை மணி ரவீணாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் மணி அவ்வாறு செய்தது தவறு என்றும், எனக்கு விருப்பம் இருந்தால் நான் சண்டையிட்டவர்களுடன் மீண்டும் பேசுவேன் அது என்னுடைய விருப்பம். அதில் மணி தலையிடக் கூடாது என நிக்சனிடம் ரவீணா கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் மணியிடம் பேச ரவீணா முயற்சிக்க, ஆனால் மணியோ என்னை நோகடித்தவர்களிடம் இருந்து நான் விலகி இருக்கவே விரும்புவதாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் மணிக்கு ஒரு காதலி இருப்பதாகவும், அது தனக்கும் தெரியும் எனவும் ரவீணா கூறுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. இனி இந்த நட்பு வெளியே வந்த பிறகு தொடருமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

author avatar
Archana
Continue Reading
To Top