கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றவர் ராஷ்மிகா மந்தனா. அடுத்து பிளாக்பஸ்டர் மூவியான புஷ்பா படம் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதில் நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கும் அடுத்தடுத்து தமிழில் வாய்ப்பும் வரவில்லை. இதையடுத்து இந்தியில் நுழைந்தார். இப்போது வெளிவந்த அனிமல் படத்தில் நடித்து இந்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
துவக்கத்தில் கன்னட படங்களில் நடித்த போது, வளரும் நடிகராக இருந்த ரக்ஷ ஷெட்டி என்பவரை காதலித்திருக்கிறார். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் இருந்த ரக்ஷ ஷெட்டியின் புத்திசாலித்தனம், அவரது திறமையை கண்டு வியந்துபோன ராஷ்மிகா மந்தனா ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்ய முடிவு செய்து, இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகியிருக்கிறது.
அந்த நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் அவரை தேடி வந்திருக்கிறது. இதையடுத்து சினிமாவில் நடித்தால் இன்னும் நிறைய பணமும், பேரும் சம்பாதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்த ராஷ்மிகா மந்தனா, எங்களுக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. திருமணமும் இல்லை என்று கூறவிட்டு, படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த ரக்ஷ ஷெட்டி, சினிமா பீல்டை விட்டு வெளியே முயன்றபோது அங்கிருந்த சில அனுபவசாலிகள், சினிமாவில் இதெல்லாம் சகஜம். இந்த தோல்விகளை எல்லாம் கடந்து ஜெயிக்க வேண்டும் என்று, அவரை தொடர்ந்து சினிமாவில் நீடிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜய தேவரகொண்டா ரெட்டியுடன் மாலத்தீவுக்கு ரகசியமாக சுற்றுலா சென்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வௌியிட்ட ராஷ்மிகா மந்தனா, தனக்கும் அவருக்கும் இருக்கும் உறவை நாடறிய செய்துவிட்டார். இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவாகி உள்ளது. இனி சில ஆண்டுகள்தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்றால் மிக வசதியான நடிகரை தன் வாழ்க்கை துணையாக்க முடிவு செய்துவிட்டார் ராஷ்மிகா மந்தனா என, ஒரு நேர்காணலில் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.