“அந்த சம்பவத்தை நினைத்தால்” பயணம் முடிந்ததும் ஆரம்பித்த டார்ச்சர்..! இளம்பெண்ணுக்கு வீடியோ கால் செய்து ரேபிடோ டிரைவர் செய்த் செயல்… அதிரவைக்கும் வீடியோ..!

By Swetha on வைகாசி 12, 2026

Spread the love

பெங்களூருவில் ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸி சேவையைப் பயன்படுத்திய பெண் ஒருவர், பயணம் முடிந்த பிறகு அந்த வாகன ஓட்டுநர் தன்னை வீடியோ கால் செய்து துன்புறுத்தியதாகப் புகார் அளித்துள்ளார். பயணம் முடிந்த சிறிது நேரத்திலேயே அந்த ஓட்டுநர் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதுடன், தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் சமூக வலைதளத்தில் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண், ஓட்டுநர் தனது தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி வீடியோ கால் செய்த ஆதாரங்களை எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டார். இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள் மீண்டும் முன்னுக்கு வந்தன. தொழில்நுட்ப வசதிகள் பயணங்களை எளிதாக்கினாலும், இதுபோன்ற சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாகப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

   

https://www.instagram.com/reel/DYDEsf7h7Km/?utm_source=ig_web_copy_link

   

இந்த விவகாரம் தொடர்பாக ரேபிடோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது. சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கணக்கு உடனடியாக முடக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ரேபிடோ நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.