பாமகவில் ராமதாஸிற்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. கட்சியின் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தங்களுடைய பலத்தை கட்சியில் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக இருவரும் கூட்டத்தையும் நடத்தி வருகிறார்கள். மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டவர்கள் அதே பதவியில் தொடர்வார்கள் என்றும் அன்புமணி அறிவித்து அதிரடி காட்டுவதுமாக இருந்து வருகிறது. ஒருவரை ஒருவர் மாறி மாறி பயங்கரமாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், அன்புமணிக்கு பதிலாக ராமதாஸ் புதிய வாரிசை அரசியலில் களமிறக்கியுள்ளார். நேற்று நடந்த பாமக மகளிர் மாநாட்டில் ராமதாஸுடன் மகள் காந்திமதியும் பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல், ராமதாஸினுடைய மகள் வழிப்பேரன் முகுந்தனின் சகோதரர் சுகுந்தனும் பங்கேற்றிருந்தார். இது தற்போது அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் ராமதாஸ் அன்புமணிக்கு பதிலாக புதிய வாரிசை களமிறக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…