![d1 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/11/d1-2.jpg)
CINEMA
ரச்சிதாவுக்கு இப்படி ஒரு விசித்திரமான நோயா..? இதான் விவாகரத்துக்கு காரணமா..? பயில்வான் ரங்கநாதன் சொன்ன அதிர்ச்சி தகவல்..
டிவி சீரியல் நடிகை ரக்சிதா மகாலட்சுமி, மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர். கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரக்சிதா பங்கேற்றார். ரக்சிதா கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் அவரை டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் காதலிக்கும் ஆர்வத்தில் பின்தொடர, அவரை ரக்சிதா கண்டுகொள்ளாமல் புறக்கணித்தார். அவரை தொடர்ந்து, இந்த ஆண்டு இப்போது ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்சிதாவின் கணவர் தினேஷ் பங்கேற்றுள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, திருமணத்துக்கு பிறகு ரக்ஷிதா மகாலட்சுமி, தினேஷ் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வருஷ கணக்காக பிரிந்துள்ளனர். தினேஷ்தான் ரக்சிதா என் மனைவி, ரக்சிதா என் மனைவி என கூறிக்கொண்டு இருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் தினேஷ் என் கணவர் என்று ரக்ஷிதா சொல்வது இல்லை. அவரை எனக்கு பிடிக்கலை, அவர் சரியில்லை என்றுதான் ரக்ஷிதா கூறி வருகிறார். பப்ளிசிட்டிக்கு ஆசைப்பட்டு தினேஷ், பிரயத்தனப்பட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாள் இருப்பவர்களுக்குதான் டைட்டில் வின்னர் கிடைக்கும். அதனால் தினேஷூக்கு டைட்டில் வின்னர் வாய்ப்பு இல்லை.
ரக்ஷிதாவுக்கு ஒரு விநோதமான நோய் இருப்பதாக அவரே சொல்லி இருக்கிறார். அதாவது, சாப்பிடாமலேயே அவருக்கு உடல் எடை அதிகரிக்கிறது. சாப்பாட்டை பார்த்தாலே அவருக்கு பசி தீர்ந்துவிடுகிறது. இப்படி ஒரு நோய்க்கு அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். காலையில் சத்துமாவு கஞ்சியும், மதியம் இளநீர் மட்டுமே ரக்ஷிதா சாப்பிடுகிறார். உடம்பு எடை அதிகாிக்காமல் இருக்க தொடர்ந்து டயட்டில் இருந்து வருகிறார். மீண்டும் தன் கணவருடன் சேரும் எண்ணத்தில் ரக்ஷிதா இல்லாத நிலையில், அவர் என் மனைவி, மனைவி என்று தினேஷ்தான் பப்ளிசிட்டி தேடிக்கொண்டு இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.