‘தாத்தா இவ்ளோ லேட்டா வரலாமா…? பேரனின் காது குத்து விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த்… நம்ம சூப்பர் ஸ்டார் பேரனோட பேர் என்ன தெரியுமா…?

By Begam

Updated on:

இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார். இவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்சமயம் விவாகரத்து பெற்றனர்.

   

இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இவரும் முதல் திருமணமாகி விவாகரத்தானவர் தான். இரண்டாவது திருமணமாக தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் அரசியல் பிரமுகர்களும் ,சினிமா திரை பிரபலங்களும் கலந்து கொள்ள சென்னை கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் கோலாகலமாக நடந்தது.

சௌந்தர்யா விசாகன் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது கர்ப்பமாக இருந்தார். நேற்று இரவு அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ‘வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி’ என்று பெயர் சூட்டியுள்ளனர். சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே வேத் என்ற  மகன் உள்ளார்.

தற்பொழுது சௌந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வீர் ரஜினிகாந்த் பிறந்து ஓராண்டு ஆகும் நிலையில், தற்போது அவருக்கு விஷாகனின் குலதெய்வம் கோவிலில் வைத்து மொட்டை போட்டு காதுகுத்து விழா நடத்தி உள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் திருக்கோவிலில் ரஜினியின் பேரன் வீர் ரஜினிகாந்திற்கு மொட்டை போட்டுள்ளனர். இதுதான் விஷாகனின் குலதெய்வம் கோவில்.

இங்கு வைத்து தான்  இதில் குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு லேட்டாக வந்த தாத்தா ரஜினிகாந்த், விழாவில் கலந்துகொண்டு விட்டு, விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.