விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மையில் தன்னைப்பற்றி தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்று நடிகர் ரஜினிகாந்த் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், திருமாவளவன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.
“காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என ரஜினி பதிவிட்டுள்ள வாசகம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனாவை தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து (தவெக) நீக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
