என் கல்யாணத்துக்கு அனுமதி இல்ல…மீறி வந்தா ஒதைப்பேன்- பத்திரிக்கையளர்களை அவமானப்படுத்திய ரஜினி…!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

   

1980 கள் வரை அவர் வில்லனாகவும், கமல், சிவகுமார் மற்றும் ஜெய் சங்கர் ஆகியோரின் படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்து வந்தார். முரட்டுக் காளை உள்ளிட்ட சில படங்களின் வெற்றியால் அவர் வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக மாறினார்.

ரஜினிகாந்த் ஹீரோவாக மாறிய சில ஆண்டுகளிலேயே லதாவை காதலித்து மணந்துகொண்டார். அப்போது ரஜினிகாந்த் தில்லு முல்லு படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். ரஜினிகாந்தின் திருமணத்துக்கு பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறியிருந்தார். தன்னுடைய திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை வைத்திருந்தார்.

அப்போது ஒரு பத்திரிக்கையாளர் “அழைப்பு இல்லாமல் நாங்கள் கல்யாந்த்துக்கு வந்தா என்ன பண்ணுவீங்க” எனக் கேட்டார். அவரிடம் கொஞ்சம் கூட யோசிக்காமால் “ஒதைப்பேன்” என ஜாலியாக சொல்லிவிட்டார். அதனால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சலசலப்பு எழ, தான் சொன்ன வார்த்தையின் கவனக்குறைவை உணர்ந்த ரஜினிகாந்த் அதன் பின்னர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரஜினி, உச்சத்துக்கு சென்ற போது இதுபோல பத்திரிக்கையாளர்களிடம் சில முறை உரசல் சம்பவங்கள் நடந்துள்ளன. மதுரை ஏர்ப்போட்டில் கூட போதையில் தகராறு செய்து அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.