Categories: சினிமா

இந்த படம் சரியா வருமா..? சத்தமாக கேட்ட ரஜினியை SP முத்துராமன் எப்படி சமாதானப்படுத்தினார் தெரியுமா ?

Spread the love

தமிழ் சினிமாவில் நான்கு தசாப்தங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

தன்னுடைய ஆரம்ப காலத்தில் ரஜினிகாந்த் அதிகமாக இணைந்து வெற்றி படங்கள் கொடுத்தது இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில்தான். அவர்கள் இயக்கத்தில் வந்த பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் பாணியில் அமைந்தன. அதில் உச்சம் தொட்டது முரட்டுக் காளை திரைப்படம். இருவரும் இணைந்து 25 படங்கள் பணிபுரிந்துள்ளனர்.

இவர்கள் கூட்டணியில் உருவான ஆறிலிருந்து அறுபது வரை மற்றும் எங்கேயே கேட்ட குரல் ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவர்களின் கமர்ஷியல் பாணியில் இருந்து விலகி எதார்த்தமான பாணியில் உருவாக்கப்பட்டது. இதில் ஆறிலிருந்து அறுபது வயது வரை திரைப்படம் உருவாக்கத்தின் போது ரஜினிக்கு அந்த படத்தில் முழுவதும் நம்பிக்கையில்லையாம்.

ஷூட்டிங்கின் போது தினமும் இயக்குனர் எஸ் பி முத்துராமனிடம் “இந்த படம் சரியாக உருவாவது போல எனக்கு தோன்றவில்லை” என சொல்லியுள்ளார். இயக்குனர் எஸ் பி முத்துராமனும் கதாசிரியர் பஞ்சு அருணாசலமும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லையாம்.

அதன் பிறகு அவரிடம் “ஒன்று செய்வோம். எந்த தலையீடும் இல்லாமல் எங்களை 5000 அடி எடுக்க விடுங்கள். அதன் பிறகு உங்களுக்கு போட்டுக் காட்டுகிறோம். அதன் பிறகு முடிவெடுக்கலாம்” எனக் கூறியுள்ளார். அதற்கு ரஜினியும் சம்மதம் தெரிவிக்கவே அதன்படி படத்தை எடுத்து போட்டு காட்டியுள்ளனர். அதை பார்த்த பின்னர் ரஜினிக்கு முழு திருப்தி வந்துவிட்டதாம்.

அப்படி உருவான ஆறிலிருந்து அறுபது வயது வரை திரைப்படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது ரஜினிக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது எஸ் பி முத்துராமனுக்கும் கிடைத்துள்ளது.

vinoth

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

18 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

44 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

55 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

1 மணத்தியாலம் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

1 மணத்தியாலம் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

1 மணத்தியாலம் ago