![ram - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/ram.jpg)
CINEMA
சாமானியன் படம் ஓடவே ஓடாது.. அதற்கு காரணம் தயாரிப்பாளர் தான்.. ஆவேசப்பட்டு பேசிய நடிகர் ராமராஜன்..!!
80ஸ் காலகட்டத்தில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் இருக்கும் ஒரு தியேட்டரில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊரு விட்டு ஊரு வந்து, நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு, வில்லுப்பாட்டுக்காரன் ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் ராமராஜன் நடித்துள்ளார். ராமராஜனின் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ஆர்.ராகேஷ் இயக்கத்தில் உருவான சாமானியன் படத்தில் ராமராஜன் நடித்தார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்திற்கும் இளையராஜா தான் இசை அமைத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு சாமானியம் படம் வெற்றி பெறவில்லை. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் TVP மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ராமராஜனின் சாமானியன் படம் 25-நாளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அதனை கொண்டாடும் விதமாக ராமராஜன் ஆலங்குளத்திற்கு சென்றுள்ளார். அவரது ரசிகர் மன்றத்தினர் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமராஜன் தனது படத்திற்கு பெண்கள் சாரை சாரையாக வருவது உற்சாகத்தை அளிக்கிறது. டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை எளிய சாமானிய மக்கள் தியேட்டருக்கு வர முடியாமல் போகிறது.
நாளையில் இருந்து ஆலங்குளம் தியேட்டரில் 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறினார். 35 வருடத்திற்கு பிறகு கரகாட்டம் படத்தில் இருக்கும் வரவேற்பு தாய்மார்கள் மத்தியில் இன்று வரை உள்ளது. 25-வது நாள் விழாவை கொண்டாடும் விதமாக ராமராஜன் கேக் வெட்டினார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத் என்றவாறு ஆக்கிவிட்டார். சாமானியன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் போதிய அளவு விளம்பரம் கொடுக்க முன்வரவில்லை.
விளம்பரப்படுத்தினால் தான் இப்போது ஒரு படம் இருப்பது மக்களுக்கு தெரியும். படம் பார்க்க மக்கள் தியேட்டருக்கு வருவார்கள். ஆனால் சாமானியன் படத்திற்கு தயாரிப்பாளர் விளம்பரம் செய்யவில்லை என ராமராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தான் சினிமாவில் இருப்பதை மக்கள் மறக்காமல் இருக்கிறார்கள் என்றால் அதற்கு இளையராஜா தான் காரணம். இளையராஜாவை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது கரகாட்டக்காரன் படத்தை மீண்டும் திரையிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
View this post on Instagram