விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் ‘ஆலியா மானசா’. இந்த தொடரின் மூலம் அவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து பல விளம்பர படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
இவர் நடித்த ராஜா ராணி தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஷ், அய்லா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தைக்கு பிறந்த பின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார்.
இரண்டாவது குழந்தை கருத்தரிக்கவே, அந்த சீரியலில் இருந்து விலகினார். சஞ்சீவை திருமணம் செய்ய ஆலியா மானசாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு பெற்றோருடன் பேசுவதில்லை.
அவர்களை மிகவும் மிஸ் பண்ணுவதாக ஒரு நிகழ்ச்சியில் கூறி வருத்தம் அடைந்தார் ஆலியா மானசா. இந்த நிலையில் ஆலியா மானசாவின் பெற்றோர் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக வருகிறது.