தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மொன்தா’ புயலானது நாளை அதிக வேகத்துடன் கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலியாக, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை செங்கை, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி, மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விருதுநகரில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது
