ரயில் பயணிகளுக்கு ஸ்பெஷல் ஆஃபர்… டிக்கெட் புக்கிங்கில் 3 சதவீத தள்ளுபடி… ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 31, 2025

Spread the love

ரயில் ஒன் செயலி வழியாக முன்பதிவு டிக்கெட் புக்கிங் செய்தால் ரயில்வே வேலட்டில் இருந்து பேமெண்ட் செலுத்தினால் மூன்று சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. ஆனால் பிற டிஜிட்டல் தல மூலமாக பேமெண்ட் செய்தால் இந்த தள்ளுபடி கிடையாது. இந்த நிலையில் பயணிகள் ரயில் ஒன் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்வதை ஊக்குவிப்பதற்காக எந்த வகையான டிஜிட்டல் பேமெண்ட் தளத்திலிருந்து கட்டணம் செலுத்தினாலும் இனி முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளுக்கு மூன்று சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாட்கள் ஆன ஜனவரி 14 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை இந்த கட்டண சலுகை வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரயில் ஒன் செயலியில் வாலட்டிலிருந்து டிக்கெட் கட்டணம் செலுத்தினால் வழங்கப்படும் மூன்று சதவீத தள்ளுபடி தொடர்ந்து அமலில் இருக்கும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் ஒன் செயலியைத் தவிர வேறு எந்த தளத்தில் டிக்கெட் செய்தாலும் இந்த ஆஃபர் கிடையாது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.