#image_title
இந்திய ரயில்வே அவ்வப்போது வேலை வாய்ப்பு போன்ற செய்திகளை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ரயில்வேயில் பணிபுரிய பலர் விரும்புவார்கள். ஆனால் அதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. ஆனால் வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கை செட்டில் ஆனது போல் தான். ஏனென்றால் அது மத்திய அரசு வேலையாக மாறிவிடும். அதனால் நிறைய சலுகைகள் கிடைக்கும்.
தற்போது இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய ஒரு முடிவை எடுத்து இருக்கிறது. அது என்னவென்றால் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிகளை மீண்டும் பணி அமைத்த ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அதற்கு ஒரு சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது.
ரயில்வேயில் இருக்கும் காலி பணியிடங்களை ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு நிரப்ப அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 65 வயதுக்கு உட்பட்டவர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. பாயிண்ட்ஸ் மேன், லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பாளர், உதவி லோகோ பைலட், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு ஓய்வு பெற்ற ஊழியர்களை நியமிக்க இருக்கின்றனர்.
ஓய்வு பெறுவதற்கு முன்பு ஐந்து ஆண்டுகளில் நன்னடத்தை சான்றிதழ் பெற்றவர்களையும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாமல் நல்ல முறையில் பணி செய்தவர்களையும் மீண்டும் பணி அமர்த்தலாம் என்று நிபந்தனை விதித்திருக்கிறது ரயில்வே. இதன் மூலம் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகுமா என்பது பற்றி சமூக வலைத்தளங்களில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…