மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் அரசின் மதிய உணவுத் திட்டத்தில் ஒரு குறைபாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளிவந்த வீடியோக்களில், பள்ளி குழந்தைகள் தரையில் விரிக்கப்பட்ட பழைய காகிதத்தில் பரிமாறப்படும் உணவை சாப்பிடுகிறார்கள். இது குறித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, செய்தித்தாளில் குழந்தைகள் உணவருந்தும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். “இந்த பரிதாபகரமான நிலையில் குழந்தைகள் மதிய உணவு உண்ணும் காட்சி என் இதயத்தை நொறுக்கியது. 20 ஆண்டுகளாக ஆளும் பாஜக அரசு குழந்தைகளுக்கான தட்டுகளையும் திருடியுள்ளது” என்று அவர் விமர்சித்துள்ளார்.
