பாக்யாவிடம் கற்பமாக இருப்பதை போட்டுடைத்த ராதிகா.. பரபரப்பான திருப்பங்களுடன் “பாக்கியலட்சுமி”..

By Begam

Published on:

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ‘பாக்கியலட்சுமி’. ஒரு குடும்பத்தில் பெண் படும் கஷ்டங்களைப் பற்றி இந்த நாடகம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. இந்த சீரிய தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. TRP யிலும் தொடர்ந்து முன்னணி இடத்தை பிடித்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

   

தற்பொழுது இந்த சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகா கர்ப்பமாக உள்ளார். இதனை இன்னும் வீட்டில் தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருப்பதால் அனைவரும் மனதிலும் சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் பாக்யா ஊறுகாய் தாளித்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த ராதிகா ‘எனக்கு கொஞ்சம் கொடுக்கறீங்களா..? என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்.

இதைத்தொடர்ந்து மயூரி வீட்டிற்கு வருகிறார். தனது அம்மாவிடம் ‘நீங்க ஏன் புளிப்பாவே  சாப்பிட்டிட்டு இருக்கீங்க..?’ என்று கேட்க இதை பாக்கியா கவனிக்கிறார். அடுத்ததாக மொட்டை மாடியில் நின்று ராதிகா தனது அம்மாவிடம் போனில், ‘என்ன செஞ்சாலும் வாந்தி மட்டும் நிக்க மாட்டேங்குது ..? ‘என்று பேசுவதை பாக்யா கவனித்து விடுகிறார்.

இதையெல்லாம் கவனித்த பாக்கியா, ராதிகாவிடம் சென்று ‘நீங்கள் நடந்துக்குறத பார்க்கும்போது  pregnanat ஆ  இருக்குறவங்க நடந்துக்கிற மாதிரியே இருக்கு’ என்று கேட்க, நெஜமாவே pregnanat ஆ இருக்கீங்களா..? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ராதிகா’ நான் டாக்டரை பார்த்தேன்.’ கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க என்று ராதிகா சொல்ல, பாக்யா அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். பாக்யா மட்டுமல்ல தற்பொழுது ரசிகர்களுமே கொஞ்சம் அதிர்ச்சியில் தான் இருக்கின்றனர்.இதோ அந்த வீடியோ…