தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும் “புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்” தலைவருமான பெங்களூரு புகழேந்தி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு தனது ஆதரவை அறிவித்துள்ளார். முன்னதாக சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் அணிகளில் பணியாற்றிய இவர், சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாகத் தான் பிரசாரம் செய்யப்போவதாகவும், எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் தொகுதியிலேயே அதிமுக தோல்வியைத் தழுவும் என்றும், இந்தத் தேர்தலோடு அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வரும் என்றும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
