தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலாரத்தை விடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படலாம். இது குறித்து அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறை இல்லாவிட்டால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் பாதுகாப்போடு செல்வது நல்லது
