BREAKING: இரவோடு இரவாக அதிமுகவில் இணைந்தார்… பிரேமலதாவுக்கு செம ஷாக்….!

By Nanthini on பங்குனி 31, 2026

Spread the love

தேமுதிகவின் ஓசூர் மாநகர் மாவட்டச் செயலாளர் ராமசாமியை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குவதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, அவர் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியை விட்டு நீக்கப்பட்ட ராமசாமி, உடனடியாக ஓசூர் அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

வரும் தேர்தல்களில் அதிமுகவின் வெற்றிக்குத் தீவிரமாகப் பாடுபடுவேன் என்று அவர் உறுதியளித்துள்ள நிலையில், தேமுதிக தலைமை நடவடிக்கை எடுத்த அதே நாளில் அவர் மாற்று முகாமிற்குச் சென்றது பிரேமலதா தரப்பிற்குப் பலத்த அதிர்ச்சியைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.