Connect with us

‘மாநாடு’ வெற்றிக்குப் பின் அடுத்தடுத்து 2 பெரிய படங்களை ரிலீஸ் பண்ணும் சுரேஷ் காமாட்சி.. தியேட்டர்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்.

CINEMA

‘மாநாடு’ வெற்றிக்குப் பின் அடுத்தடுத்து 2 பெரிய படங்களை ரிலீஸ் பண்ணும் சுரேஷ் காமாட்சி.. தியேட்டர்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்.

 

2021 ஆம் ஆண்டு ஆக்சன், லூப் கான்செப்டில் வெங்கட்  இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷினி, எஸ்.ஜே சூர்யா, எஸ்.ஏ சந்திரசேகர், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற, தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம்தான் “மாநாடு”. இப்படத்தை தயாரித்து வெளியிட்ட ப்ரொடியூசர் “சுரேஷ் காமாட்சி” முதலீடு செய்த பணத்தை விட பல மடங்கு வசூல் கிடைத்து, இவர் மேலும் மேலும் வளர்ந்து அதிக படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்து வருகிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படங்கள்; பாலா அவர்களின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து கொண்டிருக்கும் “வணங்கான்” படத்தையும் “சுரேஷ் காமாட்சி” அவர்கள் தான் தயாரித்து வருகிறார், இப்படத்தில் ஜிவி பிரகாஷ் அவர்கள் தான் இசை அமைத்துள்ளார். கூடிய விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வருவார், இப்படத்தில் முதல் முதலில் சூர்யா அவர்கள் தான் நடிக்க இருந்தார், சில பல காரணத்தால் சூர்யா அவர்கள் விலகி இப்படத்தில் அருண் விஜய் நடிக்க தொடங்கினார், ட்ரெய்லர் வெளியாகி பெருமளவு எதிர்பார்ப்பை தூண்டியது, பாலா நீண்ட நாள் பிறகு இயக்கும் படமாக இருப்பதால் படத்திற்கு எதிர்பார்பு மிகவும் அதிகமாக உள்ளது.

   

தற்போது சூரி அவர்கள் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் பெரும் அளவில் பேசப்பட்டு விருதுக்கு மேல் விருதாக குவித்த ஏழு கடல் ஏழுமலை படத்தையும் காமாட்சி சுந்தரம் அவர்கள் தான் தயாரித்து வெளியிட்டார், இப்படம் இன்டர்நேஷனல் அளவில் இவருக்கு பெயரையும் புகழையும் வாங்கித் தந்தது.

அடுத்தபடியாக ராம் படத்தை இவ்வாறு தான் தயாரித்து வருகிறார், இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, சில நாட்களுக்கு முன்னால் அப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாக ரசிக்கப்பட்டு வந்தது, இந்த படத்தின் அப்டேட்டை கூறி சீக்கிரத்தில் வெளிவருவோம் என்று சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு மாநாடு படம் வெற்றிக்குப் பின் படங்கள் மேல் படங்களாக குவிந்து கொண்டிருக்கிறது இவர் பல வித்தியாசமான விருது பெறக்கூடிய கதைகளை தேர்ந்தெடுத்து அப்படத்தை தயாரித்து வருகிறார்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top