அவருக்காக என் கையை வெட்டிக்கொள்வேன்… பரபரப்பை கிளப்பிய நடிகை பிரியாமணி..!!

By Soundarya on கார்த்திகை 3, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது வாங்கினார். பிரியாமணி என்கின்ற ப்ரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி என பல புகழுக்குரியவர். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பிரியாமணி, மணிரத்னம் படத்தில் நடிக்க அழைப்பு வந்தால், அதற்காக தன் கையை வெட்டிக் கொள்ளவும் ரெடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே மணிரத்னத்தின் ‘ராவணன்’ படத்தில் இவர் நடித்துள்ளார். மணிரத்னம் தனக்கு மிகவும் பிடித்தமான இயக்குநர் என்று கூறியுள்ள அவர், மணிரத்னம் படத்தில் நடிப்பது ஆசிர்வாதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.