Categories: சினிமா

நாங்கள் பிரிந்து விட்டோமா..? பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்க விழாவில் கலந்து கொள்ளாததற்கு காரணம் இதுதான்… நடிகர் ரஞ்சித்தின் மனைவி ஓபன் டாக்..!!

Spread the love

நடிகர் ரஞ்சித் சிந்துநதி பூவே திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர் 40 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். ஒரு சில படங்களை ரஞ்சித் இயக்கியும் இருக்கிறார். நேசம் புதிது திரைப்படத்தில் ரஞ்சித் பிரியா ராமருடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்தனர். இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். அதன்பிறகு நடிகை ராதா சுதாவை ரஞ்சித் திருமணம் செய்தார்.

அந்த வாழ்க்கையும் சரியாக அமையாததால் ரஞ்சித் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். சில மாதங்கள் கழித்து ரஞ்சித் மீண்டும் தனது முதல் மனைவியுடன் இணைந்து விட்டார். இருவரும் தங்களது உண்மையான காதலை புரிந்து கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். பல்வேறு திரைப்படங்களில் பிரியா ராமன் கதாநாயகியாகவும் குணசேகர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். சீரியலிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ரஞ்சித் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரியா ராமன் பங்கேற்கவில்லை. அதனால் இருவரும் மீண்டும் பிரிந்து விட்டார்களா என செய்திகள் வலம் வந்தது.

இந்த நிலையில் பிரியா ராமன் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது ரஞ்சித் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து கடைசி நேரத்தில் தான் முடிவு எடுக்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் நாங்கள் எடுத்த முடிவு தான் அது. எங்களுக்கு நெருக்கமான ஒரு இளம் ஜோடிகளுக்கு எங்களால் நல்லது நடக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. இருவரில் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். எங்களை நம்பி இளம் ஜோடி இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு யாரும் கிடையாது. ஒரு நல்லது நடக்கும் போது அந்த இடத்தில் நாங்கள் இருவரும் இருக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்பட்டார்கள்.

#image_title

நாங்கள் வாக்கு கொடுத்து விட்டோம். அதே நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என நினைக்கவில்லை. இதனால் ரஞ்சித் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து விட்டார். அவருக்கு பதிலாக அந்த இடத்தில் நான் அந்த ஜோடிகளுக்கு எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து கொடுத்தேன். ரஞ்சித் மிகவும் இளகிய மனதுக்காரர். வெளியிலே அவர் எப்படி இருக்கிறாரோ அதேபோல் தான் பிக் பாஸ் வீட்டிலும் இருக்கிறார். எந்த இடத்திலும் அவர் நடிக்கவில்லை. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சில வருடங்கள் கழித்து அவரிடம் பேசினாலும் அதே போலத்தான் பேசுவார். அப்போது அவர் உண்மையாக இருக்கிறார் என புரிந்து கொள்வார்கள் என தனது கணவரை சப்போர்ட் செய்து பிரியா ராமன் பேசியுள்ளார்.

admin

Recent Posts

“அட! இப்படி ஒரு அசத்தலான திட்டமா?… கையில் சொளையாக ரூ. 40 லட்சம்… போஸ்ட் ஆபிஸின் சூப்பர் ‘மேஜிக்’ சேமிப்பு திட்டம்”…!!!

நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவது இயல்பானது. பங்குச்சந்தை போன்ற…

4 minutes ago

“விஜய் வருவார்… ஜெயிப்பார்..!” அன்றே கணித்த ஆர்.பி.சௌத்ரி.. வைரலாகும் பழைய வீடியோ…!

விஜய்க்கு 'பூவே உனக்காக' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து, அவரது திரைப்பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. அண்மையில்…

8 minutes ago

சினிமாவில் ₹200 கோடி… அரசியலில் ₹2 லட்சம்..! விஜய்யின் மெகா தியாகம் – பின்னணி என்ன..?

நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும் வேளையில், ஒரு படத்திற்கு சுமார் 275 கோடி ரூபாய் வரை ஊதியமாகப்…

9 minutes ago

“வயிறு எப்போதும் உப்பசமாக இருக்கிறதா?… நீங்கள் செய்யும் இந்த 6 தவறுகள் தான் காரணம்… இனி கவலையே வேண்டாம்… இதோ எளிய தீர்வு”…!!!

வயிறு உப்புசம் என்பது இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான செரிமானப் பிரச்சனையாகும். இரைப்பை குடலியல் நிபுணர் Dr.…

14 minutes ago

“இத்தனை நாளா இது தெரியாம போச்சே!… டாய்லெட் கறையை விரட்ட ‘அந்த’ ஒரு பொருள் போதும்!… ரசாயன வாசனை இல்லாத மேஜிக் கிளீனர்… இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்”…!!!

வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கடுமையான ரசாயனங்களுக்குப் பதிலாக, பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவை ஒரு சிறந்த…

24 minutes ago

“2017 கூவத்தூர் டூ 2026 பூரணாங்குப்பம்”… விஜய்க்கு 10 சீட்.. சி.வி.சண்முகத்திற்கு டெப்யூட்டி சிஎம்?.. நள்ளிரவில் கசிந்த ரகசிய டீல்..!

தமிழக அரசியலில் 2017-ம் ஆண்டு அரங்கேறிய கூவத்தூர் அதிரடிச் சம்பவங்கள், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புதுச்சேரி பூரணாங்குப்பம்…

34 minutes ago