#image_title
இந்து மத வழிபாடுகள் கொண்டாட்டங்களில் முக்கியமானது நவராத்திரி திருவிழா. இந்த நவராத்திரியில் பெண் தெய்வங்களை முன்னிலைப்படுத்தி கொலுவில் அமர்த்தி பத்தாவது நாள் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த தசரா திருவிழா தென்தமிழகமான திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.
திருச்செந்தூருக்கு அருகே இருக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மகிஷாசுரனை அம்பாள் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். இது மட்டுமல்லாமல் திருநெல்வேலி தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் கடவுள்களின் வேஷம் அணிந்து கோவிலுக்கு செல்வர். திருநெல்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் 9 நாட்கள் 9 வித அலங்காரங்களை அம்பாளுக்கு செய்து விசேஷ பூஜைகளில் நடத்துவர்.
எந்தெந்த பகுதியில் அம்பாள் திருக்கோவில்கள் இருக்கிறதோ அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக ஒன்று சேர்ந்து ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு விசேஷ பூஜைகளை கொடுத்து தங்களது குடும்பம் சார்பாக குடும்ப நலனுக்காக நடத்துவர். பத்தாவது நாள் தசரா அன்று மகா பூஜை நடைபெற்று அன்றைய தினம் அம்பாளை சப்பரத்தில் ஏற்றி சப்பர வீதி உலா நடைபெறுவது விசேஷமான நிகழ்வாகும்.
இது மட்டுமல்லாமல் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு ஆண்களும் பெண்களும் மாலை அணிந்து விரதம் இருந்து செல்வர். திரிசூலம் அலகு குத்துவது தீச்சட்டி ஏந்துவது போன்ற வேண்டுதல்களை குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நிறைவேற்றுவர். காளி போன்ற வேடம் அணிந்து ஆண்கள் காணிக்கை பெற்று கோவிலுக்கு செல்வர். காளி வேடம் மட்டுமல்லாது முருகன், குறவன் குறத்தி அரக்கன் போன்ற பல வேடங்கள் தரித்து கோவிலுக்கு செல்லும்போது திருநெல்வேலி முழுவதுமே விழாக்கோலம் பூண்டு கடவுள்கள் எல்லாம் வீதியில் நடமாடுவது போல இருக்கும். அவ்வளவு பிரசித்தி பெற்ற ஆண்டுதோறும் நடைபெறும் விசேஷமான திருவிழா தான் இந்த தசரா திருவிழா.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி காரணமாக, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா அதிரடியாக…
திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி தமிழக அரசியல்…
சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.…
தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆனந்த்…
35 வயதான ஒரு நபர், தனது 11 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, வாழ்க்கைத் தேர்வுகளை மறுபரிசீலனை செய்துள்ளார். பல…
தமிழக அரசியலில் தற்போதைய பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் தனது முகநூல் பதிவின் மூலம்…