பப்லு தங்கையிடம் வம்பு செய்த அஜீத்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நிஜமாகவே அஜித்தை அடிக்க பிளான் பண்ண பப்லு.. அவரே சொன்ன விஷயம்..

By Sumathi

Updated on:

நடிகர் பப்லு பிருத்விராஜ், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு நடிகர். பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்தாண்டு தன்னை விட 24 வயது குறைந்த பெண்ணுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபத்தில் அவர்கள் பிரிந்துவிட்ட நிலையில், அந்த விஷயங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், நடிகர் பப்லு ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, சின்ன வயதில் நான், என் சகோதரிகள் இருவர் என 3 பேருமே ஒரே ஸ்கூலில் படித்தோம். அப்போது அஜீத்குமாரும் அந்த ஸ்கூலில் என் சகோதரிகள் படித்த வகுப்பில்தான் படித்தார்.

   

என் இரண்டு சகோதரிகளில் ஒருவருக்கு தலைமுடி சுருட்டையாக இருக்கும். அதனால் அவரை உடன் படித்த மாணவர்கள் சிலர் பயங்கரமாக கிண்டல், கேலி செய்வர். ஷூ லேஸ் கயிறுகளை கட் பண்ணி விடுவர்.நோட் புத்தகங்களில் இங்க் கொட்டி விடுவர். சுவிங்கத்தை மென்று தலைமுடிக்குள் சிக்க வைத்துவிடுவர். இதையெல்லாம் செய்வது அந்த வகுப்பில் படிக்கும் அஜீத் தான் என என் தங்கை என்னிடம் சொன்னாள். ஒருநாள் வகுப்பறைக்கு சென்று அந்த அஜீத்தை பார்த்துவிட்டு, இருடா, நேரம் வரட்டும், உன்னை ஒரு கை பார்த்துவிடுகிறேன் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். ரொம்ப நாள் இந்த கோபம் மனசிலேயே எனக்கு இருந்தது.

பல ஆண்டுகளுக்கு பின் நான் வளர்ந்த பிறகு, அவள் வருவாளா படத்தில் நடிக்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போகிறேன். அங்கே ஹீரோவாக நடிப்பது அஜீத்குமார் என எனக்கு தெரிய வருகிறது. அங்கு அவரை பார்த்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. படத்தில் பைட் சீன் வைத்தால், உண்மையிலேயே அஜீத்தை அடித்துவிடலாம் என்றும் மனதில் பிளான் செய்துக்கெொண்டேன். ஆனால் அப்போதும் ஆத்திரம் தீரவில்லை. அப்போது அவர் வளரும் நடிகராக இருந்தார். பெரிய ஸ்டார் ஆகவில்லை. அதனால் நேரடியாக அவரிடம் சென்று, ஸ்கூலில் என் சகோதரியிடம் வம்பு செய்தவர் நீங்கள்தானே, என கோபமாக கேட்டேன்.

முதலில் குழம்பிய அஜீத் பின்னர் புரிந்துக்கொண்டு, ஆமாம் சார், உங்கள் சகோதரிகளுடன் ஒரே வகுப்பறையில் படித்தது நான்தான். ஆனால் உங்கள் சகோதரியை டார்ச்சர் செய்தது, வம்பு செய்தது எல்லாம் நான் அல்ல. அந்த மாணவன் பெயர் அஜீத் மேனன். என்பெயர் அஜீத்குமார் என்று கூறினார். அதற்கு பிறகுதான் எனக்கு நடந்தது எல்லாம் புரிந்தது. இதுதெரியாமல் பல ஆண்டுகளாக அஜீத்குமார் மீது நான் கோபப்பட்டு இருக்கிறேன். உண்மையில் அவர் ஒரு ஜெண்டில் மேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் பப்லு பிருத்விராஜ்.

author avatar
Sumathi