தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஒரு கிலோ மல்லிகை 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் முல்லை ரூ.2500, சாதிப்பூ ரூ.2000, காக்கட்டான் ரூ.1500, அரளிப்பூ ரூ.400, பன்னீர் ரோஸ் மற்றும் சம்பங்கி ஆகியவை தலா 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்கு பிறகு விலை படிப்படியாக குறையும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
