சென்னையில் சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நான் அப்போது பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது, அப்படி இருந்தால் அதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பேசினேன். ஆனால் எனது பேச்சை திரித்து நான் இனப்படுகொலையை தூண்டி விட்டதாக பொய்ச் செய்தியை பரப்பினார்கள். நான் சொல்லாதவற்றை சொன்னதாக நாடு முழுவதும் வதந்தி கிளப்பினார்கள்.
இந்த பொய் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சிலர் அவரது தலைக்கு விலை வைத்து ஒரு சாமியார் 10 லட்சம் முன், மற்றொரு சாமியார் ஒரு கோடியும் தருவதாக அறிவித்ததாக அவர் சுட்டிக் காட்டினார். என்னை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால் நான் பேசியதில் எந்த தவறும் கிடையாது மன்னிப்பு கேட்க முடியாது, எந்த நீதிமன்றத்திற்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், நான் வழக்கை எதிர்கொள்வேன் என்று உறுதியாக தெரிவித்தேன். தமிழ்நாட்டில் நாம் செய்யும் நல்ல திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல இளைஞர்கள் முன் வர வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
