Connect with us

CINEMA

1000 பேர் வந்தாலும் கேப்டனுக்கு அவர் மட்டும்தான் க்ளோஸ்… கைய புடிச்சு ஒரு வார்த்தை சொன்னா போதும்… விஜயகாந்த் மனைவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!!

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். அப்படிப்பட்ட சிறந்த ஹீரோவாக விளங்கிய விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

   

சமீபத்தில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, கேப்டன் விஜயகாந்தின் உடல் நலத்தில் சற்று பின்னடைவு தான், ஆனால் கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நன்றாக இருப்பார். அவர் பழையபடி பேசுவார் எழுந்து வருவார் எனவும் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம் என்று கூறியிருந்த நிலையில் இது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் தொண்டர்களை சந்தித்து கையசைத்தார். இருந்தாலும் அவரின் உடல்நிலை சற்று மோசமாகத்தான் இருந்தது. இந்நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், கேப்டனை 1000 பேர் வந்து பார்த்தாலும் நெருங்கிய நண்பராக ஒருவர் தான் உள்ளார். அவர் வந்து பார்த்தால் கேப்டனுக்கு அப்படி ஒரு தெளிவு கிடைக்கும்.

அதாவது தியாகு நேரில் வந்து அவரை பார்த்து கையைப் பிடித்து இதெல்லாம் ஒன்றுமே கிடையாது என்று கூறினால் கேப்டன் மகிழ்ச்சி அடைந்து விடுவார். ஆனால் சற்று அவருக்கு தற்போது காலில் பிரச்சனை உள்ளதால் கேப்டனை வந்து நேரில் பார்க்க முடியவில்லை. ஆனால் தியாகுவின் மகன்கள் கேப்டனின் மகன்களுடன் நெருக்கமாக உள்ளதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top