திமுக கூட்டணியில் 10 தொகுதிகளைப் பெற்றுள்ள தேமுதிக, தற்போது குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறியால் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தான் போட்டியிடத் திட்டமிட்டுள்ள ரிஷிவந்தியம் மற்றும் முக்கிய நகரத் தொகுதியான விருகம்பாக்கம் உள்ளிட்ட பட்டியலை திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவிடம் வழங்கியுள்ளார்.
இருப்பினும், திமுக தரப்பில் இந்த குறிப்பிட்ட தொகுதிகளை விட்டுக்கொடுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தனது அரசியல் பயணத்தில் முக்கியமாகக் கருதும் ரிஷிவந்தியம் தொகுதியை திமுக ஒதுக்கத் தயங்குவது பிரேமலதாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக இந்தப் பிணக்கைச் சரிசெய்ய இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
