BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா.. காலையிலேயே தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்…..!

By Nanthini on தை 30, 2026

Spread the love

தேமுதிகவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பு, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடாது என்றும், கட்சியின் நலன் கருதி சரியான நேரத்தில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப கௌரவமான இடங்கள் ஒதுக்கப்படும் கூட்டணியே இறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பிரேமலதாவின் இந்த கருத்திற்கு மாறாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிகவுடன் தற்போது வரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என இபிஎஸ் நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். கூட்டணி அமைப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே இத்தகைய முரண்பட்ட தகவல்கள் வெளியாகியிருப்பது, தொகுதிப் பங்கீடு மற்றும் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பதையே காட்டுகிறது.