“குழந்தை வேணாம் கருவை கலைச்சிடு”… 16 வயது பெண்ணை ஏமாற்றிய காதலன்.. அடுத்து நடந்த பயங்கர சம்பவம்… திடுக்கிடும் பின்னணி…!

By Nanthini on புரட்டாதி 30, 2025

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 16 வயது மைனர் பெண் ஒருவரை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிவிட்டு பிறகு கருவை கலைக்க சொன்ன இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது சதாம் என்பவர் இன்ஜினியர் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பதினாறு வயது மைனர் பெண் ஒருவருடன் பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் கர்ப்பம் ஆகியுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் நேற்று முன்தினம் ராய்ப்பூருக்கு சென்றுள்ளார். அங்குள்ள லாட்ஜில் இரண்டு பேரும் தங்கி உள்ளனர்.

அங்கு வைத்து முகமது சதாம் அந்த பெண்ணிடம் கருவை கலைத்துவிடு என்று கூறியுள்ளார். அதேசமயம் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். பிறகு சமாதானம் அடைந்து தூங்க சென்றுள்ளனர். அப்போது கருவை கலைக்க சொல்கிறாயா என ஆத்திரமடைந்த அந்த பெண் காதலன் விரட்டிய அந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

   

மேலும் அவரின் செல்போனை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு ரயில்வே நிலையத்திற்கு சென்றுவிட்டார். அங்கு சாவியை தூக்கி எறிந்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்கு வந்த மகளிடம் எங்கு சென்றாய் என்று தாய் கேட்டதும் நடந்த விஷயம் பற்றி கூறியுள்ளார். உடனடியாக அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.