தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாகச் சாடியுள்ளார். ரசிகர்கள் ஒரு நடிகருக்காக விசில் அடிக்கலாமே தவிர, நாட்டின் எதிர்காலத்தை அவரிடம் ஒப்படைத்துவிட முடியாது என்று கூறிய அவர், மொழி மற்றும் இனப் போராட்டங்களின் போது விஜய் எப்போதாவது குரல் கொடுத்ததுண்டா என வினவினார். சினிமா மாடலுக்கும் நிஜ அரசியலுக்கும் வித்தியாசம் இருப்பதை மக்கள் உணர வேண்டும் என்றும், மக்களின் அன்பைத் தவறாகப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற முயலக் கூடாது என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
பாஜக மதுரையை மணிப்பூர் ஆக்க முயல்வதாகவும், அவர்களுக்கு மதம் முக்கியமல்ல அதிகாரம் தான் முக்கியம் என்றும் விமர்சித்த பிரகாஷ் ராஜ், அதனைத் தடுக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கோரினார். இதற்கிடையில், திமுக தரப்பும் விஜய்யின் மத அடையாளத்தைச் சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. கில்லி போன்ற படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தாலும், அரசியல் என்று வரும்போது தேச நலனுக்காகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ள பிரகாஷ் ராஜின் இந்த உரையாடல் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியில் சிவில் பிரிவில் 7 இடங்களும், எலெக்ட்ரிக்கல் பிரிவில் 4 இடங்களும் என மொத்தம் 11 இளநிலை…
உலகிலேயே அதிக ராணுவ பலமும், தற்காப்புத் துறைக்குக் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கும் வல்லரசு நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது. ஆனால், ஈரானுக்கு…
மத்திய கிழக்கில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த உச்சக்கட்ட பதற்றம், ஈரான் 'ஹார்முஸ் ஜலசந்தியை' (Strait of Hormuz)…
நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் மீதான விவாதம் தற்போது அனல் பறந்து வருகிறது. இந்த…
இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மரின் காது, மூக்கு, தொண்டை (ENT) துறையில் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டத்திற்காக இப்பணியிடம்…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது இறுதிப்…