#image_title
பிரபல நடன இயக்குனர் சுந்தரத்தின் மகனான நடிகர் பிரபுதேவா திரைப்பட நடிகர், நடன இயக்குனர் மற்றும் திரைப்பட இயக்குனரும் ஆவார்.இவர் வேகமாக நடனம் ஆடும் திறமைக்காக இந்தியாவின் மைக்கில் ஜாக்சன் என்றும் கூறுவார்கள். இவர் இதுவரை சுமார் 100 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடனமாடியுள்ளார். இவரது முதல் நடனம் வெற்றி விழா என்ற படத்திலிருந்து ஆரம்பமானது.
இவர் 1989 ல் இவர் இந்து என்ற படத்தில் ரோஜாவுடேன் இணைந்து நடித்திருந்தார். இதுவே இவர் ஹீரோவாக நடித்த முதல் படமாகும். இவருக்கு மின்சாரக்கனவு என்ற படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே பாடலுக்காக சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது கிடைத்தது. பின்னர் போக்கிரி , வில்லு, எங்கேயும் காதல் போன்ற பல தமிழ் மற்றும் ஹிந்தி படங்களையும் இயக்கியுள்ளார்.இப்படங்கள் ரசிகர்களால் கவரப்பட்டு, மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.
இந்நிலையில் அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் Goat படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் அதில் பிரபுதேவாவும் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில் பிரபுதேவா தனது பொங்கல் வாழ்த்தை தெரிவித்த வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இதில் அவர் தனது இரண்டு மகன்களுடன் இணைந்து பொங்கல் வாழ்த்து கூறினார். இவரின் ரசிகர்களுக்கு ஒரு மகனை மட்டுமே தெரிந்திருந்த நிலையில் தற்போது தனது இரண்டாவது மகனையும் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…
முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…