கடந்த 1994 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு, ரகுவரன் மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் காதலன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் செய்தியாகவும் நல்ல வெற்றி பெற்றது. இந்த படம் தமிழில் வெற்றி பெற்றதால் தெலுங்கிலும் ஹிந்திலும் மொழிபெயர்ப்பு செய்த ரிலீஸ் செய்தனர். அது மட்டுமல்லாமல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை நக்மாவுக்கு ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
காதலை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தின் கதை உருவானதால் அப்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. இப்படியான நிலையில் காதலன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய வசந்தபாலன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், காதலன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரசாந்த் தான். அந்த சமயத்தில் பிரபுதேவா பல படங்களில் நடனமாடி கலக்கிக் கொண்டிருந்தார். குறிப்பாக லாலாக்கி டோல் டப்பிமா என்ற பாடலில் அவருடைய நடனத்தை பார்த்து அவர் சினிமாவில் மிகப்பெரிய ஒரு ஸ்டாராக வருவார் என்று நான் நம்பினேன்.
அதே மாதிரி பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் முதலில் நடிக்க இருந்தார். ஆனால் அவருக்கு கால் சூட் பிரச்சினை இருந்ததால் விலகிவிட்ட நிலையில் பிரபுதேவா உடன் நடிப்பதற்கு நக்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகும் பாடலில் பிரபுதேவா இருந்தால் கட்டாயம் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று நானும் சிந்தித்தேன். அதன்படி சங்கர் சாரும் பிரபுதேவாவை படத்தில் ஹீரோவாக தேர்வு செய்தார். வடிவேலுவும் அந்த சமயத்தில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்ததால் பிரபுதேவா வடிவேலு காம்பினேஷன் என்பது நன்றாகவே இருந்தது. முதன் முதலில் படத்தில் ஊர்வசி பாடலை தான் எடுத்தோம்.
முதல் பாடலை சூப்பராக வந்துவிட்டது. அதனைப் போலவே முக்காலா என்ற பாடலும் வேற லெவலில் அமைந்தது. நிறைய புதுவிதமான விஷயங்கள் படத்தில் இருந்ததால் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து படம் வெற்றி பெறும் என தோன்றியது. அதனைப் போலவே பிரபுதேவாவை எப்படியாவது சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த ஷங்கர் இந்த படம் மூலம் பிரபுதேவாவை ஒரு புதுவிதமான தோற்றத்தில் அனைவருக்கும் காட்டினார் என்று வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…