விட்ட கேட்ச்… அடுத்த பந்தே பவுண்டரி.. ஃபார்ம் அவுட்டில் தவிக்கும் பும்ராவை வெளுத்த பிரப்சிம்ரன் சிங்.. ஐபிஎல் போட்டியில் பரபரப்பு..!!

By Swetha on வைகாசி 15, 2026

Spread the love

ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ஜஸ்பிரித் பும்ரா விட்ட கேட்ச் வாய்ப்பை பயன்படுத்தி பிரப்சிம்ரன் சிங் அதிரடி காட்டினார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. ஆட்டத்தின் நான்காவது ஓவரில், ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் பிரப்சிம்ரன் சிங் 11 ரன்களில் இருந்தபோது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை பின்களத்தில் நின்றிருந்த பும்ரா தவறவிட்டார்.

இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட பிரப்சிம்ரன் சிங், பும்ராவின் பந்துவீச்சிலேயே பவுண்டரி அடித்து அவரைத் தண்டித்தார். பும்ராவின் துல்லியமான பந்துவீச்சை துணிச்சலாக எதிர்கொண்ட அவர், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளைச் சிதறடித்தார். வெறும் 39 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

   

பும்ரா விட்ட அந்த ஒரு கேட்ச் போட்டியின் போக்கையே மாற்றியது. பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் அணி 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான பும்ரா, கேட்ச் கோட்டை விட்டது மட்டுமின்றி இந்தப் போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்தது மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.