அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான அய்யப்பன் பேசிய பேச்சு பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், ஒரு கட்டத்தில் காவல்துறையினரையும் அரசு அதிகாரிகளையும் நேரடியாக மிரட்டும் தொனியில் பேசியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசிய அய்யப்பன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். பெண்கள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகக் கூறினார். ஆனால், இத்தகைய சூழலிலும் காவல்துறையினர் தங்களைப் போன்ற அரசியல் கட்சியினரிடம் மட்டும் அதிகாரத்தைக் காட்டுவதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்னும் இரண்டு மாதங்களில் திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்றும், அதன் பிறகு அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும் கூறினார். அவ்வாறு தங்களது கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், தா.பழூரில் காவல் நிலையமே இருக்காது என்றும், அங்குள்ள காவலர்களை ஒட்டுமொத்தமாகக் கலைத்துவிட்டு வெளியூருக்கு அனுப்பிவிடுவோம் என்றும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
அரசு அதிகாரிகளோ அல்லது காவல்துறையினரோ தங்களிடம் வீண் வைத்துக் கொள்ள வேண்டாம் என அவர் விடுத்த இந்த மிரட்டல், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு அரசியல் பிரமுகர், பாதுகாப்பு அரணாக விளங்கும் காவல் நிலையத்தையே அகற்றுவோம் எனப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…